ACTIVITIES AND ADSECONOMYPBTSELANGOR

டெம்பளர் தொகுதியில் 600 பேருக்கு நோன்பு பெருநாள் பற்றுச்சீட்டுகள் விநியோகம்

ஷா ஆலம், ஏப் 10- நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த 600 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை டெம்பளர் சட்டமன்றத் தொகுதி வழங்கும்.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் மற்றும் இதுவரை இத்திட்டத்தின் வழி பயன்பெறாதவர்களுக்கு 100 வெள்ளி மதிப்பிலான இந்தப் பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும் என்று தொகுதி உறுப்பினர் சானி ஹம்சான் கூறினார்.

இத்திட்டத்தின் கீழ்க் பயன்பெறுவதற்கு உண்மையில் தகுதி பெற்றவர்களை அடையாளம் காணும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். அதன் பின்னரே இந்த பற்றுச்சீட்டுகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபடுவோம் என்றார் அவர்.

ரமலான் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இந்தப் பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்படும் எனக் கூறிய அவர், இங்குள்ள பாசார் ராயாஸ்ரீ தெர்னாக்கில் இந்தப் பற்றுச்சீட்டுகளைக் கொடுத்துத் தங்களுக்குத் தேவையான பொருள்களை அவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

இது தவிர, நோன்பு பெருநாளை முன்னிட்ட குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு 800 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உணவுப் பொட்டலங்கள் ஆதரவற்றோர், தனித்து வாழும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள் மற்றும் வருமானப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களுக்கு வெகு விரைவில் வழங்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

 


Pengarang :