ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPBT

ரமலான் பஜாருக்கு சிறுவர்களை அழைத்து வருவது குறித்து எக்ஸ்கோ கூட்டத்தில் விவாதிக்கப்படும்

ஷா ஆலம், ஏப்.12: 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ரமலான் பஜாருக்கு அழைத்து வருவது குறித்து எக்ஸ்கோ கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

இவ்விவகாரத்தில் வெவ்வேறு கருத்துகள் உள்ளன, எனவே இது முழுமையாக ஆராயப்பட வேண்டும் என்று  ஊராட்சி மன்றங்கள், பொது போக்குவரத்து, புதுக் கிராம மேம்பாடு  ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

” சிறுவர்கள் பஜாருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்று சிலர் நினைக்கிறார்கள், ஏனெனில் அவர்களின் தடுப்பூசி விகிதம் இன்னும் குறைவாக உள்ளது மற்றும் கோவிட் -19 தொற்றுக்கான ஆபத்தும் அதிகம் உள்ளது.

“இருப்பினும், இது அவசியம் என்று நினைப்பவர்களும் உள்ளனர், ஏனெனில் பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களை விட்டுச் சென்று உணவு வாங்குவது கடினம், ”என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இதுவரை ரமலான் பஜாரின் செயல்பாடு சீராக இயங்கி வருவதாகவும், அதை நன்கு கட்டுப்படுத்த முடியும் என்றும் ஸீ ஹான் கூறினார்.

“வணிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் நிலையான இயக்க நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக ஊராட்சி மன்றங்கள், தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது,” என்று அவர் கூறினார்.


Pengarang :