ஷா ஆலம், ஏப்ரல் 13: ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஏ) ஊழியர் ஒருவர், எவரெஸ்ட் சிகரத்தை வென்ற மாநிலத்தின் முதல் பெண்மணியாக வேண்டும் என்று விரும்புகிறார்.
42 வயதான ரீனா ஜோர்டானா அட்னான், மேலும் ஒன்பது பங்கேற்பாளர்களுடன் ஒற்றுமை உணர்வோடு மேற்கொள்ளப்படும் பணி நாளை தொடங்கும் என்றார்.
” மாநிலத்திற்கு ஏதாவது பங்களிக்க விரும்புகிறேன். நான் உச்சியை அடையும் போது, சிலாங்கூர் கொடி கம்பீரமாகப் பறக்க வேண்டும்.
“இதுவரை, பகாங் மற்றும் திரங்கானுவைச் சேர்ந்த மூன்று உள்ளூர் பெண்கள், உலகின் மிக உயரமான சிகரத்தில் கால் பதிக்க முடிந்தது,” என்று அவர் கூறினார்.
டத்தோ மந்திரி புசார் சிலாங்கூர் கொடியை எம்பிஎஸ்ஏவின் உதவி இளைஞர் மற்றும் விளையாட்டு அதிகாரியிடம் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.
இங்கு அருகிலுள்ள சுல்தான் சலாவுடின் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தில் கொடி ஒப்படைக்கப் பட்டபோது, டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, 8,800 மீட்டருக்கு மேல் உள்ள சிகரத்தை கைப்பற்ற ரீனாவின் தயார் நிலை குறித்தும் கேட்டார்.