ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

60 வயது மேற்பட்டவர்களுக்கும் நோய்த்தொற்றுக்கு எளிதில் இலக்காக கூடியவர்களுக்கு இரண்டாவது பூஸ்டர் டோஸ்

ஷா ஆலம், ஏப்ரல் 14: ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்கள் கொண்ட 60 வயது வயது மேற்பட்டவர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ளவர்கள் இரண்டாவது பூஸ்டர் டோஸ் பெற விருப்பம் அளிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

முதல் பூஸ்டர் டோஸுக்குப் பிறகு நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள் மறு பூஸ்டர் டோஸ் எடுக்கப்படலாம் என்றும் மைசெஜாத்ரா மூலம் முன்பதிவு மற்றும் சந்திப்பு செயல்முறை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கைரி ஜமாலுதின் கூறினார்.

“இந்த இரண்டாவது பூஸ்டர் டோஸ் கட்டாயமில்லை மற்றும் இது விருப்பமானது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியமாக உள்ளவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்கள் இல்லாதவர்கள், மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, அவர்கள் இரண்டாவது பூஸ்டர் டோஸைப் பெறலாம், ”என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாவும் உடனிருந்தார்.

முதல் பூஸ்டர் டோஸைப் பெற்ற 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள், ஆனால் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் குணமடைந்த மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது பூஸ்டர் டோஸைப் பெற முடியும் என்று அவர் கூறினார்.

 

 


Pengarang :