ஷா ஆலம், ஏப்ரல் 30: ஜெண்டராம் ஹிலிர் மூல நீர் பம்ப் நிலையத்தின் நுழைவாயிலில் உள்ள மாசுபாடு வெற்றிகரமாக தீர்க்கப்பட்டது, சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் (எல்ஆர்ஏ) இன்று பிற்பகல் 4 மணிக்கு செயல்படத் தொடங்கியது.
இன்று நள்ளிரவுக்குப் பிறகு நீர்த்தேக்கம் ஸ்திரமாகவும், போதுமான அளவு நீர் இருப்பும் இருக்கும் பட்சத்தில் படிப்படியாக நீர் விநியோகம் செய்யப்படும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
“சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையமும் (LUAS) சிலாங்கூர் வாட்டரும் குறுகிய காலத்தில் மாசுபாட்டைச் சமாளிக்க கடுமையாக உழைத்து வருகின்றன. தண்ணீர் லாரிகள் தயாராக உள்ளன, தேவைப்படும் பகுதிகளுக்கு நீர் கொண்டு செல்லப்படும்,” என்று அவர் பேஸ்புக் மூலம் தெரிவித்தார்.
இன்று மதியம் 12.15 மணியளவில் ஜெண்டராம் ஹிலிர் மூல நீர் பம்ப் நிலையத்தின் நுழைவாயிலில் ஏற்பட்ட மாசு காரணமாக சுங்கை செமினி நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதன் விளைவாக, பெட்டாலிங், உலு லங்காட், சிப்பாங், புத்ராஜெயா மற்றும் கோலா லங்காட் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மொத்தம் 463 பகுதிகள் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடைகளை சந்தித்தன.