ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியது- பெண்மணி மரணம், இருவர் காயம்

கங்கார், மே- கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் பெண்மணி ஒருவர் உயிரிழந்ததோடு ஓட்டுநரும் அவரின் மகனும் காயமடைந்தனர். இச்சம்பவம் கோல பெர்லிஸ், ஜாலான் டத்தோ அலியில் இன்று காலை 7.15 மணியளவில் நிகழ்ந்த து.

இவ்விபத்தில் 33 வயது பெண்மணி சம்பவ இடத்திலேயே மரணமடைந்த வேளையில் அவரின் கணவரும் மகனும் கங்கார், துவாங்கு பவுசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யுஷாரிபுடின் முகமது யூசுப் கூறினார்.

இந்த விபத்தில் பலியானவர் 33 வயதான மீரா அஸிரா முகமது என அடையாளம் காணப்பட்ட வேளையில் அவரின் கணவரான நோர் ரிட்சுவான் அப்துல் ரஹ்மான் (வயது 33) மற்றும் நான்கு வயது மகனான ரபியாத்துல் அடாவியா நோர் ரிட்சுவான் காயங்களுக்குள்ளானதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

அவ்வாடவர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்த சாலையின் இடப்புறம் உள்ள மரத்தில் மோதியதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் பிரேக் தடங்கள் காணப்படவில்லை என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாக கூறிய அவர், இச்சம்பவம் நிகழ்ந்த போது வானிலை நன்றாக இருந்ததாக சொன்னார்.


Pengarang :