சிகிஞ்சான், மே 11: இன்று காலை வீசிய பலத்த சூறைக்காற்றால் சிகிஞ்சான் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 வீடுகள் சேதமடைந்தன.
அதிகாலை 5 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டின் மேற்கூரை காற்றினால் அடித்துச் செல்லப்பட்டதாகவும், சில மரங்கள் விழுந்ததால் சேதமடைந்ததாகவும் சிகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.
“இந்தச் சம்பவத்தால் அறுவடை செய்யப்பட வேண்டிய பல நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு உதவும். தற்போது, பாதிக்கப் பட்டவர்களில் பெரும்பாலோர் காவல்துறையில் புகார் அளிக்கின்றனர்,” என்று இன்று சுமார் 100 விவசாயிகளின் அமைதிப் பேரணியில், அவர்களைச் சந்தித்தபோது கூறினார்.
எனவே, இந்த நேரத்தில் உலகை ஆட்டிப்படைக்கும் பருவநிலை மாற்றப் பிரச்சனையால் குடியிருப்பாளர்கள் எப்போதும் கவனமாக இருக்குமாறு சிலாங்கூர் மாநிலச் சட்டசபையின் சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.
அதே நேரத்தில், கோவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கப் பெரிய அளவிலான ஹரி ராயா திறந்த இல்லம் ஏற்பாடு செய்யப்படாது என்றார்.
“நாங்கள் கிராமத் தலைவரின் வீட்டில் குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய (கொண்டாட்டங்கள்) மட்டுமே நடத்துகிறோம். மேலும், நாங்கள் குடியிருப்பாளர்களைக் கட்டம் கட்டமாகச் சந்திக்கிறோம்,” என்றார்.