ECONOMYMEDIA STATEMENTPBT

“கித்தா செமுவா கெஅடிலான்“ பேரணி இன்று கோத்தா ராஜா தொகுயில் நடைபெறுகிறது

ஷா ஆலம், மே 16- சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் ஏற்பாட்டிலான “கித்தா செமுவா கெஅடிலான்“ பேரணி இன்று திங்கள்கிழமை கோத்தா ராஜா தொகுதியில் நடைபெறுகிறது.

இந்நிகழ்வு ஷா ஆலம் செக்சன் 32, ஜாலான் புக்கிட் நாகா, எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்தில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் என்று கெஅடிலான் கட்சியின் கோத்தா ராஜா தொகுதித் தலைவர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

இந்த பேரணியில் கெஅடிலான் கட்சியின் சிலாங்கூர் மாநில தலைமைத்து மன்றத் தலைவரும் மாநில மந்திரி புசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, கட்சியின் பொதுச் செயலாளரும் கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் மற்றும் கட்சியின் பிரமுகர்கள் கலந்து கொள்வர் என அவர் தெரிவித்தார்.

இந்த கித்தா செமுவா கெஅடிலான் எனும் இயக்கம் மாநிலத்திலுள்ள அனைத்து 22 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நடத்தப்படுகிறது.

பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக கட்சி உறுப்பினர்களைக் தயார் படுத்துவது மற்றும் அவர்கள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்துவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Pengarang :