ECONOMYNATIONAL

ராயல் மலேசிய விமானப்படையின் விமானம் தாழ்வாக பறந்தது

கோலாலம்பூர், மே 31: கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் ராயல் மலேசிய விமானப்படையின் (டியூடிஎம்) விமானங்கள் தாழ்வாகப் பறப்பதைக் கண்டால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை சுபாங் விமான தளத்தில் நடைபெறும் ராயல் மலேசிய விமானப்படையின் 64 வது ஆண்டு விழா அணிவகுப்பு விழாவிற்கான இணைந்த பயிற்சி என்று  ஆகாயப்படை (டியூடிஎம்) இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“பயிற்சியின் போது, ராயல் மலேசிய விமானப்படையின் விமானம் திறன் விளக்கப் பயிற்சிகளுக்காக தாழ்வான-நிலை மற்றும் தந்திரோபாய பயிற்சிகளை செய்யும்” என்று அறிக்கை கூறுகிறது.

மே 28 முதல் ஜூன் 1 வரை மரியாதை அணிவகுப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை ராயல் மலேசிய விமானப்படை செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Pengarang :