ECONOMYHEALTHSELANGOR

இந்த வார இறுதியில் உலு பெர்ணம் மற்றும் சிகிஞ்சானில் இலவச சுகாதார பரிசோதனை

ஷா ஆலம், மே 31: இந்த வார இறுதியில் உலு பெர்ணம் மற்றும் சிகிஞ்சான் மாநில சட்டமன்றம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச சுகாதார பரிசோதனைகள் தொடரும்.

சிலாங்கூர் பொது சுகாதார ஆலோசகர் கூறுகையில், சிலாங்கூர் சாரிங் நிகழ்ச்சி சனிக்கிழமை உலு பெர்ணமில் உள்ள கோ சோ கிளப் மண்டபத்தில் நடைபெறும், அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சிகிஞ்சானில் உள்ள யோக் குவான் சீன ஆரம்ப பள்ளி மண்டபத்தில் நடைபெறும்.

“உள்ளூர் மக்கள் தங்கள் நோய்களைக் கண்டறிய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த முயற்சியால் அவர்களின் உடல்நிலையை அறிய முடியும்.

“குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து வந்து அவர்களின் உடல்நிலையை பரிசோதிக்கவும். ஏதேனும் நோய் கண்டறியப்பட்டால், நாங்கள் சிகிச்சை மற்றும் ஒரு சிறப்பு மருத்துவரை சந்திக்க உதவுகிறோம். நோய் தீவிரமடைவதற்கு முன்பு தடுப்பது சிறந்தது,” என்று டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

சிலாங்கூர் சாரிங்கின் வெற்றிக்காக மாநில அரசு RM34 லட்சத்தை ஒதுக்கியுள்ளது, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, நீரழிவு, போன்ற குடும்ப நோய்ப் பாதிப்பு  வரலாறு கொண்ட  சுமார் 39000 குடும்பங்களுக்கு  இது பயனளிக்கும்

http://selangorsaring.selangkah.my என்ற இணைப்பின் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம், செல்கேர் 1-800-22-6600 அல்லது சிலாங்கூர் சமூக சுகாதார தன்னார்வலர்களை http://drsitimariah.com/talian-suka/ வழியாக அழைக்கவும்.


Pengarang :