MEDIA STATEMENTNATIONALSUKANKINI

ஏ.எப்.எப். கிண்ண கால்பந்து- ஹரிமாவ் மூடா குழு அரையிறுதிக்குத் தகுதி பெற்றது

கோலாலம்பூர், ஜூலை 10- ஏ.எப்.எப். கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் 19 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கான பிரிவில் மலேசிய அணி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதிப் பெற்றது.

நேற்று ஜாகர்த்தாவில் நடைபெற்ற பி பிரிவு ஆட்டத்தில் தீமோர் லெஸ்தே குழுவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் வழி ஹாரிமாவ் மூடா குழு இந்த வாய்ப்பினைப் பெற்றது.

இந்தப் போட்டியில் மூன்று புள்ளிகளை முழுமையாகப் பெற்றதன் வழி பி பிரிவில் இரு சிறந்த குழுக்களில் ஒன்றாக ஹரிமாவ் மூடா தேர்வாகியுள்ளது. இப்போட்டியில் இது வரை மூன்று ஆட்டங்களில் பங்கு கொண்டுள்ள இக்குழு இரு ஆட்டங்களில் வெற்றியும் ஒரு ஆட்டத்தில் சமநிலையும் அடைந்து ஏழு புள்ளிகளைப் பெற்றிருக்கிறது.

வரும் ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெறும் குழு நிலையிலான இறுதிப் போட்டியில் இக்குழு லாவோசை எதிர்கொள்கிறது. அக்குழு மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று ஒன்பது புள்ளிகளுடன் முதல் நிலையில் உள்ளது.


Pengarang :