ஷா ஆலம், செப்டம்பர் 17: சபாக் பெர்ணம், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளில் மோசமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக பேஸ்புக் மூலம் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழைப்பொழிவு ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மிமீ/ மணி நேரம்) அதிகமாக இருக்கும் என எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும், இது ஒரு வெளியீட்டிற்கு ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் இருக்கும்.
சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும், சமூக ஊடகங்கள் மற்றும் myCuaca செயலியைப் பதிவிறக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.