ECONOMYMEDIA STATEMENT

சலவை இயந்திரத்தில் 20 கிலோ மலைப்பாம்பு- வாடிக்கையாளர் அதிர்ச்சி

ஜோகூர் பாரு, அக் 3– துணிகளைத் துவைப்பதற்கு சுய சேவை சலவை மையத்திற்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள சலவை இயந்திரம் ஒன்றில் மலைப்பாம்பு படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இச்சம்பவம் ஜோகூர் பாரு, தாமான் இம்பியான் மாஸ், ஜாலான் இம்பியான் மாஸ் 22 எனுமிடத்தில் நேற்று காலை  நிகழ்ந்தது.

இச்சம்பவம் குறித்து நேற்று காலை 9.41 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மூன்று உறுப்பினர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக லார்க்கின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர்  சுஹாய்மி முகமது ஜமால் கூறினார்.

சலவை இயந்திரத்தில் பாம்பு இருப்பதைக் கண்ட வாடிக்கையாளர் அது குறித்து கடையின் உரிமையாளரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த உரிமையாளர் தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொண்டதாக அவர் சொன்னார்.

சுமார் 1.8 மீட்டர் (6 அடி) நீளமும் 20 கிலோ எடையும் கொண்ட அந்த மலைப்பாம்பு அங்குள்ள சலவை இயந்திரங்களில் ஒன்றில் படுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

அந்த பாம்பை பிடிக்கும் போது அது ஆக்ரோஷம் காட்டவில்லை. ஐந்தே நிமிடங்களில் அதை எளிதாக பிடித்து மக்கள் நடமாட்டம் இல்லாத தொலைவானப் பகுதியில் அதனை விட்டு விட்டோம் என்றார் அவர்.


Pengarang :