ECONOMYMEDIA STATEMENT

201 கிலோ கெத்தும் இலைகள் பறிமுதல்; வாலிபர் கைது

ஜோகூர் பாரு, அக். 4- இங்குள்ள தாமான் இஸ்திமேவாவில் 19 வயது இளைஞரை கைது செய்த போலீசார், 201 கிலோ கெத்தும் இலைகள் அடங்கிய ஏழு பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

அவரது குழு சோதனை நடத்தியதாகவும், மதியம் 12.30 மணியளவில் கம்போங் மெலாயு மஜிட்டியில் அந்த வாலிபர் கைது செய்யப்பட்டதாகவும் ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் கூறினார்.

இந்த சோதனையின் போது, 18 வெளிப்படையான பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுடன், ஒன்பது லிட்டர் கெத்தும் நீர் கொண்ட ஒரு பிளாஸ்டிக் பீப்பாய் என்பவற்றை பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட வாலிபர் தலைமையில், தாமான் இஸ்திமேவா பகுதியில் மற்றொரு சோதனை நடத்தப்பட்டது மற்றும் 201 கிலோ எடையுள்ள கெத்தும் இலைகளின் ஏழு கருப்பு பிளாஸ்டிக் பொட்டலங்கள் கைப்பற்றப் பட்டன.

இருப்பினும், (இளைஞருக்கு) நடத்தப்பட்ட ஆரம்ப சிறுநீர் பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக இருந்தது. அவருக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது,” என்று ரவூப் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரிங்கிட் 2,190 என்றும், மேலும் விசாரணைக்காக வாலிபர் காவலில் வைக்கப்பட்டார் என்றும் அவர் கூறினார்.


Pengarang :