ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 1,291 புதிய கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- மூவர் உயிரிழப்பு

ஷா ஆலம், அக் 12- நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. நேற்று இந்நோயினால் 1,291 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்த புதிய எண்ணிக்கையுடன் சேர்த்து கோவிட்-19 நோய்க்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்து 57 ஆயிரத்து 508 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 21,863 பேர் இன்னும் அதன் தீவிர தாக்கத்தை கொண்டிருக்கின்றனர். அவர்களில் 20,897 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 920 பேர் மருத்துவமனையிலும் 46 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 தொடர்புடைய மூன்று மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகின. இதனுடன் சேர்த்து இந்நோய்க்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,406 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :