ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

தீபாவளி- பாண்டான்  இண்டா தொகுதியில் 500 பேருக்கு சமையல் பொருள்கள் விநியோகம்

ஷா ஆலம், அக் 24- தீபாவளியை முன்னிட்டு பாண்டான் இண்டா தொகுதியிலுள்ள 500 குடும்பங்களுக்கு சமையல் பொருள்கள் வழங்கப்பட்டன.

தீபாவளி பரிவுத் திட்டத்தின் கீழ் நேற்று இந்த உதவிப் பொருள்கள் பகிர்ந்தளிக்கப் பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

கோழி, முறுக்கு மாவு, மசாலைப் பொருள்கள் ஆகியவற்றை இத்தொகுதியிலுள்ள 500 குடும்பங்களுக்கு வழங்கினேன் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

பொருள்களைப் பெற்றவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. தீபாவளிக் கொண்டாடுவதில் ஏற்படக்கூடிய நிதிச்சுமையைக் குறைப்பதில் இந்த உதவி ஓரளவு துணை புரியும் என நம்புகிறேன் என்றார் அவர்.

தீபாவளியை முன்னிட்டு மாநில நிலையிலான தீபாவளி கொண்டாட்டம் நேற்று கிள்ளான், ஜாலான் தெங்கு கிளானாவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிலாங்கூர் ராஜா மூடா  தெங்கு அமீர் ஷா, சிறப்பு வருகை புரிந்தார். மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் ஆகியோரும் இந்நிழ்வில் கலந்து கொண்டனர்.

 


Pengarang :