ஷா ஆலம், அக் 26- பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் மாபெரும் பேரணி கோல சிலாங்கூர், டேவான் கம்போங் அசாம் ஜாவா திடலில் இன்று நடைபெறவுள்ளது.
“நம்மால் முடியும்“ எனும் கருப்பொருளில் இரவு 8.00 மணி முதல் நடைபெறும் இந்த பேரணியில் ஹராப்பான் கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்வர்.
ஹராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சியின் தலைவர் முகமது சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் ஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொள்ளும் முக்கியப் பிரமுகர்களாவர்.
சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் தலைவரும் மாநில மந்திரி புசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் இதில் பங்கேற்கவுள்ளார்.
இந்த பேரணியின் நிகழ்வுகளை கண்டு களிப்பதற்கு ஏதுவாக பக்கத்தான் ஹராப்பான் பேஸ்புக் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.