ஷா ஆலம், அக் 26- இன்று பிற்பகல், விமானி உட்பட அறுவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் கேமரன் ஹைலண்ட்ஸ், பிரிஞ்சாங்கில் விபத்துக்குள்ளானது.
அதில், விமானி உள்பட அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மூவர் சிறு காயங்களுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளனர். விபத்துக்கான காரணங்களுக்கு விசாரணை நடத்தப்படுவதாக போலீஸ் கூறுகிறது.