மலாக்கா, அக் 31 - மலாக்கா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணியளவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேராக குறைந்தது. நேற்று மாலை 4.00 மணி நிலவரப்படி ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்தனர். அலோர்காஜா கம்போங் பிளிம்பிங் சமூக மண்டபத்தில் செயல்படும் தற்காலிக நிவாரண மையத்தில் அவர்கள் தங்கியுள்ளதாக மலாக்கா மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகம் ஒரு அறிக்கையில் கூறியது. அவர்கள் கம்போங் பாஞ்சோர், கம்போங் பெரிங்கின், கம்போங் புலாவ் மற்றும் கம்போங் பெலிம்பிங் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் என்று அது தெரிவித்தது.