ECONOMYSELANGOR

சுங்கை பூலோ தொகுதியில் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவாக சிவராசா தீவிரப் பிரசாரம்

பெட்டாலிங், நவ 10- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ தொகுதியில்  பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு ஆதரவாக அத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் தொடங்கிய முதல் நாளிலிருந்தே சிவராசா மேற்கொண்டு வரும் நேர்மையான பிரசாரம் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்று அக்கூட்டணியின் வேட்பாளர் டத்தோ ஆர் ரமணன் கூறினார் .

அவரது பிரச்சாரத்திற்கு பாயா ஜெராஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் மற்றும் கோத்தா டாமன்சாரா உறுப்பினர் ஷாதிரி மன்சோர் ஆகியோரும் உதவி வருவதாக அவர் தெரிவித்தார்.

சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் முந்தைய பிரதிநிதிகள் ஆற்றிய சிறப்பான சேவை ஹராப்பானுக்கு ஒரு போனஸ் ஆகும். ஏனெனில் உள்ளூர்வாசிகள் தங்கள் தொகுதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை உணர்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்திலும் இந்த தொகுதியிலுள்ள அனைத்து தரப்பினரின் நலன் கருதி இந்த வளர்ச்சி தொடரும். ஆகவே, எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள் என்று அவர் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

நவம்பர் 19 நடைபெறும் தேர்தலில் இத்தொகுதியில் ஏழு முனைப் போட்டி நிலவுகிறது.   முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடீன் மற்றும் ரமணனுக்கிடையிலானப் போட்டியே கடுமையானதாக கருதப்படுகிறது.1


Pengarang :