ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

கட்டுமானப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்துவீர்- மேம்பட்டாளருக்கு எம்.பி.ஏ.ஜே. உத்தரவு

ஷா ஆலம், டிச 7- பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கட்டுமானப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தும்படி ஆஸ்ட்ரோரியா ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு மேம்பாட்டாளருக்கு அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் உத்தவிட்டுள்ளது.

பாதுகாப்பு வலை பொருத்துவது மற்றும் இரும்புச் சாரங்களை அமைப்பது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளருக்கு மூன்று மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நகராண்மைக் கழகம் கூறியது.

இந்நடவடிக்கையின் வாயிலாக கட்டுமானப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தும் அதேவேளையில் குடியிருப்பாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வையும் போக்க முடியும் என தனது பேஸ்புக் பதிவில் அது தெரிவித்தது.

அந்த கட்டுமானப் பகுதிக்கு நேற்று வருகை மேற்கொண்ட நகராண்மைக் கழக அதிகாரிகள் அப்பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பில் மேம்பாட்டு நிறுவன பிரதிநிதிகள், கூட்டு நிர்வாக மன்றப் பொறுப்பாளர்கள் மற்றும் கட்டிடக் கலை வல்லுநர்களுடன் விவாதித்தனர்.


Pengarang :