கோலாலம்பூர் 24 டிச ;- பிரதமர் துறையின் துணை அமைச்சரும், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்பால் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) கடந்த வெள்ளிக்கிழமை, உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடினுடன் சந்திப்பு நடத்திய பின் (SOSMA) விதிகளை கவனமாக மதிப்பாய்வு செய்வதற்கு அமைச்சர் ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார்.
முன்பு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறி, பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சொஸ்மா) கீழ் கைது செய்யப்பட்ட காடேக் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதனை பிணையில் விடுவிக்க சட்ட போராட்டம் நடத்தியவர் ராம் கர்பால் சிங்.
இப்பொழுது பிரதமர் துறையின் துணை அமைச்சராகவும் இருக்கும் அவர், இச்சட்டத்தின் உள்ளடக்கத்தை நன்கு அறிவார் என்பதால் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுடன் நடத்திய சந்திப்பின் வழி (SOSMA) விதிகளை கவனமாக மதிப்பாய்வு செய்வதற்கு ஒப்புக் கொள்ளப் பட்டதாக தெரிய வருகிறது.