ஷா ஆலம், ஜன 15- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை 300க்கும் கீழ் குறைந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று 286 பேர் இந்நோய்த் தொற்றுக்கு இலக்கான வேளையில் அவற்றில் ஒரு சம்பவம் வெளிநாட்டிலிருந்து வந்தவரிடம் அடையாளம் காணப்பட்டது.
கோவிட்-19 தொடர்புடைய மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது. இந்நோய்க் பலியானவர்களின் எண்ணிக்கை 36,908 ஆக தொடர்ந்து இருந்து வருகிறது.
இதனிடையே, நாட்டில் 10,634 பேர் கோவிட்-19 பெருந்தொற்றின் தீவிர தாக்கத்தை எதிர் கொண்டுள்ளனர். அவர்களில் 10,175 பேர் அல்லது 95.7 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தம் 439 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏழு பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.