ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் சுற்றுச்சூழல் தினம்  வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படும்

அம்பாங் ஜெயா, ஜன 31- அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் 2023 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் தினத்தை அனுசரிக்க உள்ளது. இந்த நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை மெனாரா எம்.பி.ஏ.ஜே.கட்டிடத்தின் 5வது மாடியிலுள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெறும்.

சுற்றுச்சூழலின் நீடித்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை பொது மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக நகராண்மைக் கழகத்தின் பொது உறவு மற்றும் செயலகப் பிரிவு தலைவர் நோர்ஹயாத்தி அகமது கூறினார்.

நகராண்மைக் கழகத்தின் திட்டங்களுக்கு ஆதரவளித்ததன் மூலம் சுற்றுச்சுழலை பாதுகாப்பதற்கான கணிசமான பங்கினை ஆற்றிய சமூகம் மற்றும் பள்ளிகளுக்கு இந்த நிகழ்வில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் பயன்படுத்தப் படாத மின்சார சாதனங்களை சேகரிக்கும் நகராண்மைக் கழகத்தின் திட்டங்களுக்கு அத்தரப்பினர் ஆதரவளித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சுற்றுச்சூழல் தினத்தில் உலு லங்காட் மாவட்ட சுகாதார இலாகா மற்றும் சுற்றுச்சூழல் இலாகாவின் ஏற்பாட்டில் கண்காட்சியும் நடத்தப்படும் என்றார் அவர்.

இரவு 8.00 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில் பொதுமக்களும் கலந்து சிறப்பிக்கும் படி அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :