ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

முதியோர், நோயாளிகளுக்கு உதவ சமூக நலத் திட்டம்- ரவாங் தொகுதி அறிமுகப்படுத்தியது

ஷா ஆலம், பிப் 3- ரவாங் சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டிலான ரவாங் சமூக நல உதவித் திட்டத்தின் மூலம் வசதி குறைந்த 25 பேர் பயன் பெற்றுள்ளனர்.

வசதி இல்லாத முதியோர் மற்றும் நோயாளிகளை இலக்காக கொண்ட இந்த திட்டம் இவ்வாண்டு தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நாப்கின், பால் மாவு மற்றும் மருந்துகள் வாங்க இதுவரை நாங்கள் 3,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளோம்.  இந்த உதவியின் மூலம் அவர்களின் சுமையை ஓரளவு குறைக்க முடியும் என நம்புகிறோம். இந்த சமூக நலத் திட்டத்தை மாதந்தோறும் நடத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் சொன்னார்.

இந்த சமூக நலத் திட்டத்திற்கு சுக்கா எனப்படும் சிலாங்கூர் சமூக சுகாதார தன்னார்வலர் குழுவின் ஆதரவு தங்களுக்கு கிடைத்து வருவதாக கூறிய அவர், இத்திட்டத்தில் உதவி பெறுவோருக்கு மருத்துவ சோதனையை அக்குழுவினர் மேற்கொள்கின்றனர் என்றார்.

வசதி குறைந்தவர்கள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மூத்த குடிமக்களை இலக்காக கொண்டு இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக சுவா மேலும் தெரிவித்தார்.

 


Pengarang :