SELANGOR

உலு லங்காட்டில் நீர் விநியோகத் தடை

ஷா ஆலம், பிப் 28: பெர்சியாரான் பெக்லிலிங், செக்‌ஷன் 3, பண்டார் பாரு பாங்கியில் இன்று காலை 6.30 மணி முதல் பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பிஎச்டி (ஆயர் சிலாங்கூர்), குழாய் உடைந்ததை சரி செய்யும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

உலு லங்காட்டில் உள்ள 14 பகுதிகளில் சீரமைப்புப் பணிகளால் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“பயனர்கள் ஆயர் சிலாங்கூர் செயலி, முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற எங்களின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு தளங்கள் அனைத்தையும் நாடலாம் அல்லது ஆயர் சிலாங்கூர் தொடர்பு மையத்தை 15300 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

“கேள்விகள் மற்றும் புகார்களை www.airselangor.com மற்றும் ஆயர் சிலாங்கூர் செயலியில் உள்ள உதவி பக்கத்தில் சமர்ப்பிக்கலாம்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.


Pengarang :