கோத்தா பாரு, ஏப்ரல் 7: மச்சாங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை அரச மலேசிய போலீஸ் (பிடிஆர்எம்) வாகனத்தைப் பயன்படுத்தி ரிங்கிட் 25,000 மதிப்பிலான பல்வேறு வகையான பட்டாசுகளை எடுத்துச் சென்ற போலீஸ்காரர் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.
32 மற்றும் 35 வயதுடைய இரு சந்தேக நபர்களையும் கைது செய்து பறிமுதல் செய்ததாக கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹருன் தெரிவித்தார்.
முஹமட் ஜாக்கி கூறுகையில், சந்தேக நபர்களில் ஒருவர் திரங்கானுவில் உள்ள செத்தியு மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (ஐபிடி) பணியில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரி என்றும், மற்ற சந்தேக நபர் மெக்கானிக்காக பணிபுரிந்தவர் என்றும், போதைப்பொருள் வழக்குகள் தொடர்பான ஐந்து முந்தைய பதிவுகளை கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
வெடிபொருள் சட்டம் 1957 பிரிவு 8 இன் கீழ் மேலதிக விசாரணைக்காக அவர்கள் புதன்கிழமை முதல் நாளை வரை நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்.
– பெர்னாமா