EKSKLUSIFMEDIA STATEMENT

பிரதமர் அன்வார் சித்திரை புத்தாண்டு, வைசாகி வாழ்த்துகளை தெரிவித்தார்

கோலாலம்பூர், ஏப்ரல் 14- மலேசியாவில் உள்ள இந்து தமிழர்களுக்கு சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், சீக்கியர்களுக்கு வைசாகி திருநாள் வாழ்த்துகளையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று தனது முகநூல் பதிவில், புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி தருவதாகவும், குடும்ப உறவுகள் மகிழ்ச்சியுடன் வலுவாக இருக்க வேண்டும் என்றும் அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.

“நாட்டிலுள்ள அனைத்து மலேசியர்களையும் நல்லிணக்கத்தையும் பரஸ்பர மரியாதையையும் வலுப்படுத்தவும் பராமரிக்கவும் நான் அழைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

தமிழ் புத்தாண்டு என்றும் அழைக்கப்படும் சித்திரை புத்தாண்டு என்பது தமிழ் நாட்காட்டியின் முதல் நாளாகும், இது பாரம்பரியமாக தமிழர்களால் தமிழ் மாதமான சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படுகிறது.

மறுபுறம், வைசாகி, சீக்கிய மற்றும் பஞ்சாபி நாட்காட்டிகளின் படி அறுவடை பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.


Pengarang :