ECONOMYMEDIA STATEMENT

நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது

கோலாலம்பூர், ஏப் 23- நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் நேற்றிரவு 10.00 மணி நிலவரப்படி வாகன எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப் பட்டாலும் பொதுவாக போக்குவரத்து சீராகக் காணப்பட்டது.

கோலாலம்பூரிலிருந்து கோம்பாக் டோல் சாவடி நோக்கிச் செல்லும் சாலையில் நேற்று மாலை நிலவிய வாகன நெரிசல் இரவில் சீரடைந்து சீரான போக்குவரத்து காணப்பட்டதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் வாரியத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

கிழக்குக் கரை நெடுஞ்சாலை 1 மற்றும் 2 இன் இரு வழித்தடங்களில் போக்குவரத்து சுமூகமான நிலையில் காணப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.

இதனிடையே, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் தாப்பா முதல் குவா தெப்புரோ வரையிலான பகுதியில் சற்று வாகன நெரிசல் காணப்பட்டது.

சுங்கை டுவாவிலிருந்து பெர்த்தாம் நோக்கிச் செல்லும் பகுதியின் 123.7 வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த விபத்து காரணமாக ஆறு கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..


Pengarang :