ACTIVITIES AND ADSMEDIA STATEMENT

பத்தாங் காலி இந்திய சமூகத் தலைவரின் ஏற்பாட்டில் அன்னையர் தின விழா- 30 தாய்மார்கள் சிறப்பிக்கப்பட்டனர்

பத்தாங் காலி, அம 26- பத்தாங்காலி தொகுதி கிராமத் தலைவர் ராஜன் கண்ணன் ஏற்பாட்டில் அன்னையர் தின விழா நேற்று வியாழக்கிழமை இங்குள்ள தாமான் வாவாசான் பத்தாங் காலி சமூக மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இரவு 7.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் பத்தாங் காலி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 30 தாய்மார்கள் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்த அன்னையர் தின விழா கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப் பட்டதோடு நிகழ்வில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்பட்டதாக தொகுதி இந்திய சமூகத் தலைவர் ராஜன் கண்ணன் கூறினார்.

அன்னையரின் தியாகத்தைப் போற்றுவதை நோக்கமாக கொண்ட இந்த  நிகழ்வை நாங்கள் ஆண்டுதோறும் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் நடத்தி வருவோம். இவ்வாண்டு பத்தாங் காலி நகரில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

சுமார் இரண்டாயிரம் வெள்ளி செலவில் இந்த நிகழ்வு இந்திய சமூகத் தலைவருக்கான மானியத்தின் வாயிலாக நடத்தப்பட்டது என்றார் அவர். இந்த அன்னைய தின விழாவில் கோல குபு பாரு இந்திய சமூகத் தலைவர் கே. பாலச்சந்தர் கலந்து சிறப்பித்தார்


Pengarang :