ACTIVITIES AND ADSMEDIA STATEMENT

மகத்தான சேவையாற்றிய செந்தோசா நற்சேவையாளர்கள் அங்கீகாரம்.

கிள்ளான், ஜூன் , 2 -. கடந்த 5 ஆண்டுகளில் நாடு மாபெரும் சவால்களை எதிர் நோக்கியது. குறிப்பாக கோவிட் -19 பெருந்தொற்று பரவல். இக்கால கட்டத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதுகூட  பெரும் சேவையாக மதிக்கப்பட்டது. இதே கால கட்டத்தில் வெள்ளமும் ஏற்பட்டு மக்கள் மா பெரும் அவதிக்கு ஆளாகினர். இந்த இன்னல்களுக்கு செந்தோசா சட்டமன்ற தொகுதி  விதிவிலக்கு அல்ல.  இந்த பேரிடர் காலத்திலும் அதற்கு பிந்திய காலத்திலும் செந்தோசா சட்ட மன்றத்தில் உள்ள மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிய நற்சேவையாளர்களை முறையாக அங்கீகாரம் செய்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த சிறப்பு விருந்து நிகழ்ச்சி சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி தலைமையில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஏற்பாட்டில் சிறப்பாக நடந்தேறியது.

Pengarang :