EKSKLUSIFMEDIA STATEMENT

சிலாங்கூர் சிறப்பு வாய்ந்தது, மக்களுக்கு உதவ பல முன் முயற்சிகள்  கொண்டுள்ளது.

ஷா ஆலம், ஜூலை 25: வருவாய் வசூல் மற்றும் அதிக முதலீட்டை பதிவு செய்வதில் சிலாங்கூர் பெற்ற வெற்றி, மக்களுக்கான பல்வேறு முன் முயற்சிகளை மாநில நிர்வாகம் செயல்படுத்த அனுமதிக்கிறது.

மக்கள் நலத்திட்டங்கள், கல்வி மற்றும் மக்கள்  திறன், ஆற்றல் மேம்பாடுகள்  ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் திறன் சிலாங்கூரை மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறப்பானதாக இருக்கிறது என்று டத்தோ  மந்திரி புசார் கூறினார்.

“உதாரணமாக, முதியோர் நட்பு திட்டம், முன்பு  நாம்  அதை வாரிசுகளுக்கு மட்டுமே வழங்கினோம், வயதானவர்கள் எதையும்   பெறவில்லை.

அதை இப்பொழுது அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் RM150 கொடுத்து மேம்படுத்துகிறோம்,  மேலும் அவர்கள் இறந்தால், வாரிசுகளுக்கு RM500 வழங்கப்படுகிறது.

“நாங்கள் மேம்படுத்த மற்றும் தவறுகளை சரி செய்ய முயற்சிப்போம். இது போன்ற விவகாரங்களில்  ஒரு தொடர்ச்சியான செயல்முறை  தேவை, என்பதால் இந்த விஷயங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், ”என்று அவர் நேற்றிரவு இங்கே, பிரிவு 15 இல் உள்ள மக்கள் டவுன் ஹால் அமர்வில் கூறினார்.


Pengarang :