NATIONAL

உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட்டில் கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், அக் 11: இன்று மாலை 6 மணி வரை உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும்
உலு லங்காட்டில் கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம்
(மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோலாலம்பூர், பினாங்கு மற்றும் பெர்லிஸ் முழுவதும் இதே வானிலைதான் நிலவும்
என்று எதிர்பார்க்கப்படுவதாக ஃமுகநூல் வழியாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

மேலும், கெடா, பேராக், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், சபா மற்றும் சரவாக்
போன்ற பல மாவட்டங்களை மோசமான வானிலை தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின்
தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி
நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாக பெய்யும் போது எச்சரிக்கைகள்
வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால
எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப்
பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப்
பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :