BudgetMEDIA STATEMENT

செகி ஃபிரெஷ் பேரங்காடிகள் உள்பட ஆறு இடங்களில் இன்று மலிவு விற்பனை

ஷா ஆலம், டிச 17- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் (பி.கே.பி.எஸ்.) நடத்தப்படும் ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று நான்கு கிளைகளில் நடத்தப்படும்.

கோழி, மீன், அரிசி உள்ளிட்ட சமையல் பொருள்களை மலிவான விலையில் விற்பனை செய்யும் இந்த இயக்கம் ஜாலான்  கோல சுங்கை பாரு, ஹிடாயுத்துள் பள்ளிவாசல் (கோத்தா கெமுனிங் தொகுதி), செம்பாக்கா சாரி எம்.பி.கே.கே. மண்டபம் (செமெந்தா தொகுதி), பண்டார் பாரு பாசார் மாலாம் பகுதி, (புக்கிட் மெலாவத்தி தொகதி) மற்றும் லாமான் எம்.பி.பி.ஜே. (புக்கிட் லஞ்சான் தொகுதி) ஆகிய இடங்களில் நடைபெறும்.

இது தவிர, செகி ஃப்ரெஷ் பேரங்காடி மற்றும் பி.கே.பி.எஸ்.ஒத்துழைப்பிலான மலிவு விற்பனை கோல சிலாங்கூர் மற்றும் கோம்பாக்கிலுள்ள அதன் கிளைகளில் இன்று நடைபெறுகிறது.

.வாழ்க்கைச் செலவின அதிகரிப்பினால் சிரமத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு குறிப்பாக பி40 தரப்பினருக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செகி ஃப்ரெஷ் நிறுவனம் அமல்படுத்தியுள்ளது.

மலிவு விற்பனைத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பி.கே.பி.எஸ். மற்றும் செகி ஃப்ரெஷ் பேரங்காடிக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.

சந்தையை விட குறைவான விலையில் பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் மக்களுடன் அணுக்கமான நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செகி ஃப்ரெஷ் பேரங்காடி தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இந்த ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனையை நடத்த மாநில அரசு இதுவரை 4 கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 2,850 இடங்களில் நடத்தப்பட்ட இந்த விற்பனை மூலம் சுமார் 50 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.


Pengarang :