ECONOMYMEDIA STATEMENT

வார இறுதியில் மாநிலத்தின் எட்டு இடங்களில்  ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

ஷா ஆலம், டிச 22- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாநிலத்தின் எட்டு இடங்களில் காலை 10.00 மணி தொடங்கி நடைபெறவுள்ளது.

நாளை சனிக்கிழமை கம்போங் செமேன்சே எம்.பி.கே.கே. மண்டபத்திலும் (உலுகிளாங் தொகுதி) பண்டார் ஸ்ரீபுத்ரா பங்சாபுரி ஸ்ரீ மாவாரிலும் (செமினி தொகுதி), கம்போங் ஜம்புவிலும் (பலாக்கோங் தொகுதி), செக்சன் 27ஏ எம்.பி.எஸ்.ஏ. பூலாய் மண்டபத்திலும் (கோத்தா கெமுனிங் தொகுதி) இந்த மலிவு விற்பனை நடைபெறும்

ஞாயிற்றுக்கிழமை தாமான் மாஸ் பாசார் மாலாம் பகுதியிலும் (டெங்கில் தொகுதி), கம்போங் கெபுன் பூங்காவிலும் (பத்து தீகா தொகுதி) தாமான் வங்சா செராஸ் விளையாட்டு மைதானத்திலும் (டுசுன் துவா தொகுதி) சுங்கை இங்காட், சூராவ் ஹாஜி ஓஸ்மானிலும் (மோரிப் தொகுதி) இந்த மலிவு விற்பனை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையை மலிவு விலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் விற்பனை செய்ததற்காக பி.கே.பி.எஸ். மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

ஏஹ்சான்  ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS  என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும்  அறிந்து கொள்ளலாம்.

 


Pengarang :