கோலாலம்பூர், ஜன 1- மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா நாட்டு மக்களுக்கு 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
நாடு மற்றும் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக தாங்கள் பிரார்த்தனை செய்வதாக அவர்கள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டனர்.
நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்காக தாங்கள் பிரார்த்தனை செய்வதாக இஸ்தானா நெகாராவின் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு போஸ்டரில் அவர்கள் தெரிவித்தனர்.
அனைத்து மக்களும் நாடும் நல்வாழ்வு, செழிப்பு, வளப்பம் பெறுவதோடு அனைத்து வகையான பேரழிவு மற்றும் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கவும் வேண்டுகிறோம் என்று அவர்கள் கூறினர்.