புக்கிட் ஜாலில், பிப் 9: எதிர்வரும் பிப்ரவரி மாதம் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் தேசிய அளவில் தமிழ்ப்பள்ளி களிடையே எம்எஜ்சி-கியுநெட் ஹாக்கி போட்டி 2024 நடைபெறவுள்ளது. இப்போட்டி இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டி புக்கிட் ஜாலில் ஹாக்கி அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக மலேசிய ஹாக்கி கழகத் தலைவர் டத்தோ ஶ்ரீ சுபாஹான் கமால் கலந்துக் கொள்வார்.
இப்போட்டியில் முதல் நிலையில் வரும் குழுவிற்கு வெற்றி கிண்ணம் காத்திருக்கிறது.