ECONOMYMEDIA STATEMENT

நுசெய்ராட் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்- செய்தியாளர்கள் உள்பட பலர் காயம்

காஸா, ஏப் 13- காஸா தீபகற்பத்தின் மத்தியில் உள்ள நுசெய்ராட் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதல்களில் காயமுற்றவர்களில் சில ஊடகவியலாளர்களும் அடங்குவர் என்று அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது.

காஸா மீதான தாக்குதல் குறித்த செய்தியை வெளியிட்ட டி.ஆர்.டி. அரபிக் தொலைக்காட்சியின் கள நிருபரும் இந்த தாக்குதல்களில் காயமுற்றவர்களில் அடங்குவார் என்று அது தெரிவித்தது.

கடந்தாண்டு 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களின் இதுவரை 33,600  பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளன. 

கடலோரப் பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவம் ஏற்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக காஸாவின் வட பகுதியிலுள்ள மக்கள் கடும் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர்.

இஸ்ரேலின் இந்த தொடர் தாக்குதல்கள் காரணமாக காஸாவின் சுமார் 85 விழுக்காட்டினர் தங்கள் குடியிருப்புகளை இழந்துள்ளனர். அங்கு அடிப்படை வசதிகள் முற்றாக சீர்குலைந்துள்ள நிலையில் மக்கள் உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் மருந்துகள் இன்றி அவதியுற்று வருகின்றனர்.

இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தி வருவதாக அனைத்துலக நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது. காஸாவில் பட்டினிச் சாவுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அந்நாட்டிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Pengarang :