ஷா ஆலம், டிச.19-
இங்குள்ள 31 பகுதிகளில் 1,748 நோன்புத் திருநாள் கடைகளை ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) அடுத்தாண்டு தயார் செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு டிசம்பர் 1ஆம் தேதி டிசம்பர் 31ஆம் தேதி வரையில் இக்கடைகளுக்கான விண்ணப்பங்களை எம்பிஎஸ்ஏ அகப்பக்கம் வழி சமர்ப்பிக்கலாம் என்று டத்தோ பண்டார் டத்தோ ஹாரிஸ் காசிம் கூறினார்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்கள் பதிவேற்றம் செய்தால் போதுமானது என்றார் அவர். அதேவேளையில், கடை, சந்தை அல்லது மையங்களை வாடகைக்கு எடுக்கும் தரப்பினர் தங்களது வாடகைகளை ஒட்டு மொத்தமாக செலுத்துவதை எம்பிஎஸ்ஏ ஊக்குவிக்கும் என்றும் அவர் சொன்னார்.
ஒட்டு மொத்தமாக வாடகை செலுத்துவோருக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு ஏற்ப சலுகைகள் வழங்கப்படும் என்றார் அவர்.
இந்த இயக்கம் 2020ஆம் ஆண்டு ஜனவரி 1 தொடங்கி ஜனவரி 31 வரை அமல்படுத்தப்படும்.