ஷா ஆலம், ஏப்ரல் 29:
சிலாங்கூர் மாநிலத்தில் இன்று கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றோடு ஒப்பிடும் போது ஒருவர் மட்டுமே. கடந்த ஏப்ரல் 25-இல் இதே எண்ணிக்கை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி பொது மக்களை அலட்சியமாக இருக்காதீர்கள் என அறிவுறுத்தினார்.
” சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய் தடுப்பு நடவடிக்கைகள் வெற்றியை அளிக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும். உடல் சுகாதாரத்தை பேண வேண்டும்,” என்று தமது டிவிட்டரில் மந்திரி பெசார் பதிவு செய்துள்ளார்.