ஷா ஆலம், ஆக 3- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை இன்று மீண்டும் உயர்ந்து 17,015 ஆக ஆனது. இந்த எண்ணிக்கை நேற்று 15,764 ஆக இருந்தது.
சிலாங்கூரில் இன்று 5,836 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இம்மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கி நோய் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
நாட்டின் பல மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
கோலாலம்பூரில் இன்று 2,309 நேர்வுகளும் ஜொகூரில் 1,275 நேர்வுகளும் கெடாவில் 1,036 நேர்வுகளும் சபாவில் 1,010 நேர்வுகளும் பதிவானதாக அவர் தெரிவித்தார்.
இதர மாநிலங்களில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-
பேராக் (967), கிளந்தான் (915), நெகிரி செம்பிலான் (816), பினாங்கு (798), பகாங் (628), மலாக்கா (508), சரவா (494), திரங்கானு (429), புத்ரா ஜெயா (72), பெர்லிஸ் (7), லபுவான் (5).