ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

86.4 விழுக்காட்டு இளையோர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், டிச 4- நாட்டிலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 86.4 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 19 ஆயிரத்து 106 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்.

மேலும், 89.9 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 28 ஆயிரத்து 401 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

பெரியவர்களில் 97 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 27 லட்சத்து 14 ஆயிரத்து 044 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் மேலும் 2 கோடியே 30 லட்சத்து 44 ஆயிரத்து 061 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டில் நேற்று 125,927 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 4,417 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 6,721 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 114,789 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 59 லட்சத்து 60 ஆயிரத்து 016 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :