ஷா ஆலம், டிச 12- பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் மேலும் அதிகமான முதலீடுகளை ஈர்ப்பதற்கு சிலாங்கூர் கூடுதலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் வலியுறுதியுள்ளார்.
மாநிலத்தின் மந்தமான பொருளாதார நிலையும் அதன் மீட்சிக்கு அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படாததும் கவலையளிக்கும் விஷயங்களாக உள்ளன என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.
இதன் காரணமாக வர்த்தகர்கள் ஒருவர் பின் ஒருவராக வியட்னாம் நாட்டிற்கு ஓடுகின்றனர். நாம் முதலீட்டை இழந்து கொண்டு வருகிறோம் என்றார் அவர்.
அந்நாட்டில் மனிவளச் சந்தை மலிவாக இருப்பது மற்றும் இந்தோனேசியா மற்றும் கம்போடியா நாடுகளின் போட்டி ஆகிவையும் நாம் முதலீடுகளை இழப்பதற்கு காரணமாக உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் முதலீட்டுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் தனது பணியை செவ்வனே ஆற்றி வருவதாகவும் சுல்தான் கூறினார்.