ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

கோல சிலாங்கூரில வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மந்திரி புசார் சந்தித்தார்.

ஷா ஆலம், டிச- 23- இங்குள்ள பாரிட் மஹாங் இடைநிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் தற்காலிக  வெள்ள நிவாரண மையத்திற்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் நேற்று வருகை புரிந்தார். 

அங்கு தங்கியுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மதகு உடைந்து நீர் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த காரணத்தால் 681 பேர் தற்காலிக துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அணையை மீண்டும் நிர்மாணிக்கும் பணியில் குத்தகையாளர் ஈடுபட்டு வருவதோடு   நீரை இயந்திரம் மூலம் இறைக்கும் பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது  என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.

பெஸ்தாரி ஜெயா, கம்போங் அசகான் உள்பட பல்வேறு இடங்களில் மதகு உடைந்ததை சித்தரிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தன.

Pengarang :