ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

நாட்டில் வெள்ளத்திற்கு 37 பேர் பலி- 10 பேரை காணவில்லை

 ஷா ஆலம், டிச 23- நாடு முழுவதும் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் நேற்று இரவு வரை  37 பேர் உயிரிழந்த வேளையில் மேலும் 10 பேர் காணாமல் போனதாக புகார் செய்யப் பட்டுள்ளது.

நான்கு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட  ஐவர் கடந்த 24 மணி நேரத்தில் மரணமடைந்துள்ளதோடு மேலும் இருவரைக் காணவில்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ அக்ரில் சானி கூறினார். ஏழு மாநிலங்களில்   வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 18,080 குடும்பங்களைச் சேர்ந்த 68,341 பேர் ஏழு மாநிலங்களில் உள்ள 396 துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக பகாங் உள்ளது அவர் சொன்னார். பகாங்கைத் தவிர, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், மலாக்கா, கிளந்தான் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய ஆறு மாநிலங்களும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன என்றார் அவர். இன்று, தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள வெள்ள நடவடிக்கை அறையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :