ஷா ஆலம், டிச 25 - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடா தேசிய இடைநிலைப் பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள எட்டுப் பள்ளிகளில் பழுதுபார்க்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மூத்த கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறினார். நேற்று தாம் தாமான் ஸ்ரீ மூடா தேசிய இடைநிலைப் பள்ளிக்கு தாம் மேற்கொண்ட வருகையின் போது வகுப்பறைகள், பட்டறைகள், அறிவியல் கூடங்கள் மற்றும் கணினி கூடங்கள் மோசமாக சேதமடைந்திருப்பதைக் கண்டதாக அவர் தனது முகநூல் பதிவில் கூறினார். மொத்தம் 34 பள்ளி ஆசிரியர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். அமைச்சரின் இந்த பயணத்தின் போது கல்வி அமைச்சின் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி துறைக்கான தலைமைச் செயலாளர் நூர் அஸ்மான் அப்துல் ரஹ்மானும் உடனிருந்தார். சமீபத்திய பெரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துப் பள்ளிகளும் பாதுகாப்பானதாகவும் கற்றல், கற்பித்தல் சூழலுக்கு ஏற்றதாகவும் இருப்பதை கல்வியமைச்சு உறுதி செய்யும் என்று அவர்.