ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

சிலாங்கூர் சுல்தான் பிறந்தநாளை முன்னிட்டு 145 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன

ஷா ஆலம், ஜன 12- சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 145 பேருக்கு நேற்று பட்டங்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் சுல்தான் ஷராபுடினை பிரதிநிதித்து துங்கு லக்ஸ்மனா சிலாங்கூர் துங்கு சுலைமான் ஷா இந்த விருதுகளை வழங்கினார்.

உலு சிலாங்கூர், கோம்பாக், உலு லங்காட், கோல லங்காட், கோல சிலாங்கூர், சபாக் பெர்ணம், சிப்பாங் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் இந்த விருதுகளை நேற்றைய நிகழ்வில் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் 20 பேர் பிங்காட் பெக்கர்த்தி தெர்பிலே (பி.பி.டி.) விருதையும் 25 பேர் பிங்காட் பெர்ஹிட்மாத்தான் செமெர்லாங் சிலாங்கூர் (பி.சி.எம்.) விருதையும்  64 பேர் பிங்காட் ஜாசா கெபக்த்தியான் (பி.ஜே.கே.) விருதையும் பெற்றனர். இந்த விருதுகள் எந்த அடைமொழியையும் கொண்டிருக்கவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டு சுல்தான் பிறந்த நாளையொட்டி 2020 ஆம்  ஆம் ஆண்டில் இவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படவிருந்தன. எனினும், அப்போது அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக அந்த விருதளிப்பு நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.


Pengarang :