ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

400,000 க்கும் மேற்பட்ட சிறார்கள் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்.

கோலாலம்பூர், பிப் 20: சிறார்களின் தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) மூலம் 5 முதல் 11 வயதுடைய சிறார்கள் மலேசியாவில் மொத்தம் 454,194 பேர் அல்லது 12.8 விழுக்காட்டினர் நேற்று முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் வலைத்தளத்தின் தரவுகளின் அடிப்படையில், நாட்டில் மொத்தம் 1 கோடியே 39 லட்சத்து 24 ஆயிரத்து 411 பேர் அல்லது 59.2 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் எனப்படும் ஊக்க தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் மற்றும் மொத்தம் 2 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்து 785 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் முழுமையான தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், அதே சமயம் 2 கோடியே 32 லட்சத்து 20 ஆயிரத்து 757 பேர் அல்லது 98 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோர்களில் மொத்தம் 27 லட்சத்து 98 ஆயிரத்து 646 பேர் அல்லது 89.9 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 28 லட்சத்து 83 ஆயிரத்து 444 பேர் அல்லது 92.6 விழுக்காட்டினர்  குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

72,991 முதல் டோஸ் ஊசிகள், 648 முழு டோஸ் ஊசிகள் மற்றும் 77,517 பூஸ்டர் டோஸ் ஊசிகள் உட்பட மொத்தம் 151,156 தடுப்பூசி ஊசிகள் நேற்று வழங்கப்பட்டன, இது தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டத்திற்கான (பிக்) தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6 கோடியே 60 லட்சத்து 18 ஆயிரத்து 432 ஆக உயர்ந்த்து.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட் -19 காரணமாக நேற்று 34 இறப்புகள் பதிவாகியுள்ளன


Pengarang :