கோலாலம்பூர், மார்ச் 9 – மலேசியாவின் எல்லையை மீண்டும் திறப்பது குறித்த அறிவிப்பு, அதன் பல முக்கியச் சர்வதேசச் சந்தைகளில் வலுவான தேவைக்கு ஏற்பக் கூடுதல் திறனை ஆதரிக்க வரவேற்கத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என்று ஏர் ஏசியா மலேசியா தெரிவித்துள்ளது.
“ஏப்ரல் 1, 2022 அன்று சர்வதேச எல்லைகளை முழுமையாகத் திறக்கும் மலேசிய அரசாங்கத்தின் அறிவிப்பை ஏர் ஏசியா வரவேற்கிறது.”
“ஏர்லைன்ஸ் தற்போது பல சர்வதேச சேவைகளை ஏற்கனவே இயக்கி வரும் நிலையில், இந்த அறிவிப்பு பல முக்கியச் சர்வதேசச் சந்தைகளில் வலுவான தேவைக்கு ஏற்பக் கூடுதல் திறனை ஆதரிப்பதற்கு வரவேற்கத்தக்க ஊக்கத்தை அளிக்கும்” என்று அது ஒரு மின்னஞ்சல் பதிலில் தெரிவித்துள்ளது என பெர்னாமாவிடம் இன்று தெரிவித்து
ஏர் ஏசியா அதன் நெட்வொர்க்கைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்கிறது”உலகம் படிப்படியாக மீண்டும் திறக்கப்படுவதால் புதிய சேவைகள் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்” என்று அது கூறியது.