ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

வயது வந்தோரில் 66.6 பேர் ஊக்க தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 29: நேற்றைய நிலவரப்படி நாட்டில் மொத்தம் 15,668,773 பேர் அல்லது 66.6 விழுக்காட்டினர் கோவிட்-19 இன் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி, மொத்தம் 2 கோடியே 29 லட்சத்து 50 ஆயிரத்து 73 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 2 கோடியே 32 லட்சத்து 26 ஆயிரத்து 244 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 49 ஆயிரத்து 642 பேர் அல்லது 91.6 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 46 ஆயிரத்து 672 பேர் அல்லது 94.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளில் மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 497 பேர் அல்லது 37.1 விழுக்காடு சிறார்கள் தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளனர்.

நேற்று, மொத்தம் 41,287 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, இதில் 4,360 முதல் ஊசிகள், 1,684 இரண்டாவது ஊசிகள் மற்றும் 35,243 பூஸ்டர் டோஸ் ஊசிகள் ஆகியவை தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டம் மூலம் ஒட்டுமொத்த தடுப்பூசி எண்ணிக்கை 6 கோடியே 87 லட்சத்து 45 ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட்-19 காரணமாக நேற்று 54 இறப்புகள் பதிவாகியுள்ளன.

 


Pengarang :